தம்பதியை கத்தியால் குத்திய வாலிபரிடம் போலீசார் விசாரணை !

தம்பதியை கத்தியால் குத்திய வாலிபரிடம் போலீசார் விசாரணை !

போலீசார் விசாரணை

தம்பதியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காதர்,50; இவர் சேராப்பட்டு மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8:00 மணிக்கு கடைக்கு வந்த அதேப்பகுதியை சேர்ந்த வேல்முருகன்,35; கடனில் கறி வறுவல் கேட்டார். காதர் மறுக்கவே, ஆத்திரமடைந்த வேல்முருகன் தான் வைத்திருந்த கத்தியால் காதர் மற்றும் அவரது மனைவி ஷாகிரா,45; ஆகியோரை வெட்டினார். அதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த வட பொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வேல்முருகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story