நகைகள் மாயம்-போலீசார் விசாரணை

நகைகள் மாயம்-போலீசார் விசாரணை

மாயம்

கோயம்புத்தூர், வெள்ளலூர் பகுதியில் பீரோவில் வைக்கபடிருந்த நகைகள் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளலூர், செட்டிபாளையம் சாலை திருவாதிரை நகர் பகுதியில் சேர்ந்தவர் லிங்கசாமி.கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.நேற்று வீடு திரும்பியவர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதத்தை பீரோவில் வைப்பதற்காக சென்றபோது பீரோவில் இருந்த தங்கக்காசு மோதிரம் செயின் வளையல் என 10 பவுன் நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்.

இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தனது வீட்டின் அருகில் வசிக்கும் ராஜா என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக லிங்கசாமி கூறிய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story