நெடுஞ்சாலையில் இறந்த கிடந்த நபர்

நெடுஞ்சாலையில் இறந்த கிடந்த நபர்
மரணமடைந்தவர்
கெங்கவல்லி தேசிய நெடுஞ்சாலையில் இறந்து கிடந்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஆத்தூர்-கெங்கவல்லி தேசிய நெடுஞ்சாலை மஞ்சினி பகுதி சாலையில், இன்று காலை விபத்தில் சிக்கி தலை நசுங்கி ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனை அடுத்து விபத்து எப்படி நடந்தது? தற்கொலையா? போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story