இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம்

கள்ளகுறிச்சி மாவட்டம், பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கவுதமி, 25; திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி தாய் வீடான நெடுமானுார் கிராமத்தில் நடந்த விசேஷத்திற்கு வந்த கவுதமியைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story