விவசாயி மரணம் - காவல்துறையினர் விசாரணை

விவசாயி மரணம் - காவல்துறையினர் விசாரணை

விவசாயி பலி

நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அருகே விவசாயி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எருமப்பட்டி மார்ச் 29 எருமப்பட்டி அருகே உள்ள ஜம்பு மடையைச் சேர்ந்தவர் சஞ்சீவி நாயுடு மகன் காட்டு ராஜா வயது 54 விவசாயி இவர் கடந்த சில வருடங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் காட்டுக்குச் சென்றவர் பயிர்கள் கடிக்கும் பூச்சி மருந்து குடித்து மயங்க நிலையில் கடந்துள்ளார் அவரது மகன் பாரதி கண்ணன் வயது 25 இரவு 10 மணியளவில் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மயங்கிய நிலையில் கடந்த தனது தந்தையின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி உள்ளார் அப்பொழுது அவர் மருந்து குடித்ததாக தெரிவித்ததை அடுத்து உடனடியாக அங்கிருந்து அவர்கள் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று உள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து எருமைப்பட்டி போலீசார் வழக்கு போய் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story