கந்திலி அருகே 10 சவரன் நகை வெள்ளி மற்றும் பணம் திருட்டு!

கந்திலி அருகே 10 சவரன் நகை வெள்ளி மற்றும் பணம் திருட்டு!

பணம் திருட்டு

கந்திலி அருகே 10 சவரன் நகை வெள்ளி மற்றும் பணம் திருட்டு போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே 10 சவரன் நகை வெள்ளி மற்றும் பணம் திருட்டு.போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமலிங்கம் சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வரும் நிலையில் அவரது மல்லிகா (32) மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வந்துள்ளனர். சாமலிங்கம் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தில் அவரது மனைவி மல்லிகா அவ்வப்போது நகைகளை வாங்கி வைத்துள்ளார். சுமார் 10 சவரன் தங்க நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள், 5500 பணம் இருந்த நிலையில் இரவு நேரத்தில் வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த கட்டிலின் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளான். மல்லிகா சற்று வாய் பேச முடியாத முடியாதவர் என்பதால் அவரது கணவரின் தங்கை கோவிந்தம்மாள் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ஏற்கனவே ஆறு மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் திருட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டில் மல்லிகா மற்றும் மல்லிகாவின் மாமியார் உண்ணாமலை ஆகியோர் வீட்டில் இருந்தபொழுது இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதால் உண்மையிலே வெளிநபர்கள் எவரினும் திருடி சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் கந்திலி போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story