பூதப்பாண்டியில் வேலை தேடி சென்ற நர்ஸ் மாயம்

பூதப்பாண்டியில் வேலை தேடி சென்ற நர்ஸ் மாயம்
நர்ஸ் மாயம்
கன்னியாகுமரி மாவட்டம்,துவரங்காடு பகுதியில் மாயமான நரஸ் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், பூதப்பாண்டியை அடுத்துள்ள துவரங்காடு, மத்தியாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் மகள் கிறிஸ்டினாள் (22). இவர் நர்சிங் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். பின் ஏதாவது வேலை கிடைக்குமா என்ற முயற்சியில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி காலையில் வேலை தேடி செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிறிஸ்டினா தொடர்பாக இதுவரையிலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கிறிஸ்துதாஸ் இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story