இன்ஜினியர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை

இன்ஜினியர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை
திடீர் மரணம் 
எட்டயபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து மெக்கானிக்கல் இன்ஜினியர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து மெக்கானிக்கல் இன்ஜினியர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பண்ணிக்கர் குன்று பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் விஷ்ணு சங்கரன் (32), மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வேலையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story