அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு போலீசார் விசாரணை

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளியில் லேப்டாப் திருடப்பட்ட சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளியில் லேப்டாப் திருடப்பட்ட சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள, வீடூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அலுவலக அறையில் வைக்கப்பட்டிருந்த 3 மடிக் கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியா் சாந்தி நேற்று (ஜூன் 11)அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story