தொப்பூர் காப்புக்காட்டில் ஆண் சடலம் காவல்துறையினர் விசாரணை.....

தொப்பூர் காப்புக்காட்டில் ஆண் சடலம் காவல்துறையினர் விசாரணை.....

காவல்துறை

நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட வெள்ளக்கல் அருகே தொப்பூர் காப்பு காடு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட வெள்ளக்கல் அருகே தொப்பூர் காப்புக் காடு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தொப்பூர் காவல்துறையினருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனக்காப்பாளர் கவுசல்யா கொடுத்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் யார்..? எந்த ஊரை சேர்ந்தவர்..? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது அவரை கொலை செய்து உடலை வீசி சென்றார்களா..? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story