மாந்தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் காவல்துறையினர் விசாரணை !

மாந்தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் காவல்துறையினர் விசாரணை !

வழக்கு பதிவு

காரிமங்கலம் அடுத்த சின்ன முதலைப்பட்டி டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் உள்ள மாந்தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீசார் விசாரணை.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் அடுத்த சின்ன முதலைப்பட்டி டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் உள்ள மாந்தோப்பில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக பரிமளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாந்தோப்பில் உள்ள மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 32 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது. இதுகுறித்து பொம்மை அள்ளி விஏஓ சிவதாஸ் நேற்று அளித்த புகார் படி காரிமங்கலம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story