எருமப்பட்டி அருகே பைக்குக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை

எருமப்பட்டி அருகே பைக்குக்கு தீ வைப்பு போலீஸ் விசாரணை
எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் விவசாயி இவரது மனைவி சங்கீதா இவர் பவித்திரம் ஊராட்சியில் மூணாவது வார்டு உறுப்பினராக உள்ளார் இவர்கள் பவித்திரத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டு ரெட்டி பட்டியில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு பவித்திரம் கிழக்கு தெருவில் சொந்தமாக மாடு வீடு உள்ளது இதனால் சரவணன் மட்டும் விவசாயம் பார்த்துக்கொண்டு இரவு நேரம் ஆகிவிட்டால் இந்த வீட்டில் தங்குவது வழக்கம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு சுமார் 6.30 மணி அளவில் வண்டியை வீட்டின் உள்ளே உள்ளகேட்டியின் அருகே நிப்பாட்டி விட்டு மாடியில் உறங்கசென்று விட்டார் இந்த நிலையில் சுமார் இரவு ஒரு மணி அளவில் வண்டியின் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது வெளியே வந்து பார்த்த பொழுது வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது உடனே பின்பக்க வழியாக வந்து அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் வீட்டின் முன் புறம் இருந்த மண்ணை வாரி போட்டு தீயை அனைத்தனர் மேலும் இது பற்றி எருமப்பட்டி காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர் இதன் பேரில் எருமப்பட்டி பொறுப்பு ஆய்வாளர் சுமதி மற்றும் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்த பொழுது பெற்றோர் கொண்டு வீசப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது மேலும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீப்பற்றியதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Next Story