பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த வாலிபருக்கு போலீசார் வலை.

பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த வாலிபருக்கு போலீசார் வலை.

பைல் படம் 

ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிப்பதை போட்டோ எடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வாமடம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் தனசெல்வம். இவர் அப்பகுதியை சேர்ந்த கல்லூரி பயிலும் பெண் ஒருவர் குளிக்கும் போது தனது செல்போனில் பாத்ரூமில் கையை விட்டு போட்டோ எடுத்துள்ளார். இதனை கவனித்த குளித்துக் கொண்டிருந்த பெண் செல்போனை தட்டி விட்டு கூச்சலிட்டு உள்ளார்.

அவரது சத்தம் கேட்டு பெண்ணின் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மற்றும் சகோதரர் அம்மா ஆகியோர் ஓடிவந்து தனசெல்வத்தை ஏன் இவ்வாறு செய்கிறாய் என தட்டி கேட்டனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது பெண் உடை மாற்றுவது போட்டோ இருந்தது இதுகுறித்து கேட்டபோது தனசெல்வத்தின் தந்தை அப்படித்தான் என் மகன் செய்வான் எனவும் உன்னால் முடிந்ததை செய் என பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டி சென்றார். இதுகுறித்து அந்தப் பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானசெல்வத்தை தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story