மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

சாலையோரம் 'மெட்டல் கிராஷ் பேரியர்' தடுப்புகளை கொள்ளையடித்த மர்ம கும்பல். போலீசார் வலை விச்சு.
சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலம் - முக்கனுார் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் 'மெட்டல் கிராஷ் பேரியர்' தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் சாலையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'மெட்டல் கிராஷ் பேரியர்'களை கழற்றி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இரவு நேர ரோந்து போலீசாரைப் பார்த்ததும் அந்த கும்பல் லாரியை விட்டு விட்டு தப்பியோடியது. போலீசார் லாரியுடன் 'மெட்டல் கிராஷ் பேரியர்'களை கைபற்றி வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story