விவசாய சங்க தலைவர் மீது தாக்குதல் - 2 பேருக்கு போலீஸ் வலை

விவசாய சங்க தலைவர் மீது தாக்குதல் -  2 பேருக்கு போலீஸ் வலை
விவசாய சங்க தலைவரை தாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (54) .தமிழக விவசாய சங்க வட்டார தலைவராக உள்ளார். இவர் கடந்த மாதம் 15ந் தேதி தனது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த போது சுண்ணாம்புமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லையா (46) என்பவர் வீட்டுமனை பட்டா ஏன் இன்னும் வாங்கிக் கொடுக்காமல் உள்ளாய் என கேட்டு வீண் தகராறு செய்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து நரேஷ் குமார் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். பின்னர் இது குறித்து ஊர் கூட்டத்தில் பேசி சமரசம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று இருந்த நிலையில். கடந்த 18-ந் தேதி அன்று அங்குள்ள பஜனை கோவில் அருகே நரேஷ் குமார் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த செல்லையா, மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (48) ஆகிய இருவரும் ஆபாசமாக பேசி நரேஷ் குமாரை சரமாரியாக தாக்கி இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நரேஷ் குமார் வந்தவாசி வடக்கு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள செல்லையா, அண்ணாமலை இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story