இடைத்தேர்தல் மாவட்ட ஆட்சியருடன் காவல்துறை பார்வையாளர் ஆலோசனை

இடைத்தேர்தல் மாவட்ட ஆட்சியருடன் காவல்துறை பார்வையாளர் ஆலோசனை

ஆலோசனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி ஆலோசனை
விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து காவல்துறை பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தல் பணி குறித்து அஜய்குமார் பாண்டேவிடம், மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி விளக்கினார்.அதில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆண், பெண் வாக்காளர்கள் விபரம், ஓட்டுச்சாவடி மையங்கள், பதற்றமான ஓட்டுச்சாவடி குறித்த விபரங்கள். ஓட்டு எண்ணும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள்.பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு விபரங்கள், பறக்கும் படை மூலம் கைப்பற்றிய ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் குறித்த விபரங்கள். வாகன சோதனையில் ஈடுபடும் பகுதிகள், தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ள போலீசார் குறித்த விபரங்களை விளக்கினார்.கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் உடனிருந்தார்.

Tags

Next Story