காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு

காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு

ஆய்வில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன்

சென்னை வடக்கு அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்குப்பதிவு செலுத்துவதை மாவட்டத் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, இன்று (11.04.2024) சென்னை மாவட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் (சென்னை வடக்கு) அலுவலகத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் தபால் வாக்குப்பதிவினை செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் /வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story