திண்டிவனம் ரயில் நிலையத்தில் போலீசார் குவிப்பு

திண்டிவனம் ரயில் நிலையத்தில் போலீசார் குவிப்பு

திண்டிவனம் ரயில் நிலையம் 

முதல்வர் பயணம் செய்ததை முன்னிட்டு திண்டிவனம் ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டன.
சென்னையிலிருந்து ரயில் மூலம் மயிலாடுதுறை அரசு விழாவிற்கு தமிழக முதல்வர் நேற்று மாலை பயணித்தார். திண்டிவனம் ரயில் நிலையம் வழியாக வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பிற்காக திண்டிவனம் காவல்துறை டிஎஸ்பி பசுபதி பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக திண்டிவனம் மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தது.

Tags

Next Story