பெண் ஓட்டுனர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

பெண் ஓட்டுனர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

பெண் ஓட்டுனர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக பெண் ஓட்டுனர் மீது மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு.
கோவையைச் சேர்ந்த instagram,Youtube பிரபலமான ஷர்மிளா மீது மாநகர சைபர் கிரைம் காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளனர்.கடந்த 2ஆம் தேதி சத்திரோடு சங்கனூர் சிக்னல் சந்திப்பில் C1 காவல்நிலைய போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனை போக்குவரத்து காவலர் கேட்ட நிலையில் அவரை ஓட்டுனர் ஷர்மிளா வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை கடுமையாக விமர்சித்து தனது instagram பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் ராஜேஸ்வரி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான ஷர்மிளா திமுக எம்.பி.கனிமொழி இவர் இயக்கிய பேருந்தில் பயணம் செய்த தினத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்தபோது அதிக அளவில் பேசப்பட்டார். ஓட்டுனர் பணி இழந்த ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story