பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு

பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி மீது போலீசார் வழக்கு பதிவு

திருவட்டாறு அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருவட்டாறு அருகே முன் விரோதம் காரணமாக பெண்ணை அவதூறாக பேசிய தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவட்டார் அருகே தோட்டவரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பலதா.இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிங்கராஜ் (47), கூலி தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பலதாவுக்கும், சிங்கராஜின் நண்பருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் புஷ்பலதா அவரது உறவினர்கள் சேர்ந்து சிங்கராஜின் நண்பரை தாக்கினார்கள்.இதில் ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த சிங்கராஜ் நேற்று மதுபோதையில் புஷ்பலதாவின் வீட்டு அருகில் நின்று கொண்டு அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து புஷ்பலதா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் சிங்கராஜ் மீது இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story