போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

விருதுநகர் பஜார் காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது.
விருதுநகர் பஜார் காவல் நிலையம் ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக விருதுநகர் கருமாரி மடம் எம்ஜிஆர் சிலை முன்பு பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா தலைமையில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா கலந்துகொண்டு தலைக்கவசம் அணிவது, சாலை விதிமுறைகளை பின்பற்றுவது, மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதை தொடர்ந்து எம்ஜிஆர் சிலையில் இருந்து தலைக்கவசம் அணிந்தவாறு காவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது நகராட்சி சாலை தெப்பம் மெயின் பஜார் தேசபந்து மைதானம் ஓட்டல் வழியாக வர்மா காலனி பாத்திமா நகர் வரை சென்று மீண்டும் எம்ஜிஆர் சிலை அருகே நிறைவடைந்தது.

Tags

Next Story