குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் தேடுதல் வேட்டை

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டையை போலீசார் நடத்தினர்.

குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் வீடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அதிரடி சோதனையில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் சங்குபேட்டை வெங்கடேசபுரம் .மற்றும் மாவட்டத்தில் உள்ள, குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணி அளவில் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் அவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தும் அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்பதையும் சோதனை செய்தனர்.இச்சோதனையில் சங்குப் பேட்டை அழகிரி தெரு கணேசன் மகன் குமார் 35 அதே சங்குப்பேட்டையில் பகுதியில் சேர்ந்த செல்லமுத்து மகன சூர்யா (28) துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் சசிகரன்(33) சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கஞ்சா ராஜா 41) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த அதிரடி சோதனை குறித்து பேசிய மாவட்ட காவல் .கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி இந்த சோதனையானது ரவுடிகள் மற்றும் வழக்கமான குற்றவாளிகள், சந்தேக நபர்கள் ஆகியோர்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள செய்யும் வழக்கமான சோதனை தான் என்றும் குற்றம் நடவாமல் தடுக்கவே இந்த சோதனை நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story