காவல்துறை சிறப்பு குறைத்தீர் முகாம்

காவல்துறை சிறப்பு குறைத்தீர் முகாம்

குறைத்தீர் கூட்டம்

வேலூரில் காவல்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 49 மனுக்கள் பெறப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மனு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் அளித்து குறைகளை கூறி வருகின்றனர், அது மட்டுமின்றி வாரத்திலுள்ள அனைத்து வேலை நாட்களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாகநடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 49 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

Tags

Next Story