வாணியம்பாடி அருகே காவல் நிலையம் முற்றுகை

வாணியம்பாடி அருகே காவல் நிலையம் முற்றுகை

காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள்

வாணியம்பாடி அருகே பொது வழி விடாததால் ஜேசிபி கொண்டு வீடு இடித்து சேதம் பாதிக்கப்பட்டவர் நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முற்றுகையிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி கிராமம், முருக்கன் குட்டை வட்டம் பகுதியில் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுசுவரை இரண்டு ஜே.சி.பி மற்றும் 1 டிராக்டரை கொண்டு இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது.

செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோரின் நிலம் மற்றும் வீடுகளுக்கு செல்ல பொது வழி கேட்டு கொடுக்காததால் கார்த்தி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அடியாட்கள் கொண்டு சுற்று சுவர் இடித்து தரைமட்டம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம். கிராமிய போலீசார் 1 ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story