தபால் வாக்கு செலுத்திய காவல்துறையினர்

தபால் வாக்கு செலுத்திய காவல்துறையினர்
தபால் வாக்குகள்
திண்டுக்கல்லில் இன்று காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட காவலர்கள் மூலமாக வாக்களிக்க வசதியாக இன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருவாய்த் துறையினரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

போலீசார் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வேலை பழு காரணமாக வராத போலீசாருக்கு, அவர்களை வாக்களிப்பதற்கு ஏதுவாக மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story