மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசார்

மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசார்

சூப்பிரண்டு வாழ்த்து

மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற போலீசாருக்கு சூப்பிரண்டு வாழ்த்து
தமிழ்நாடு காவல்துறை சார்பாக மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோயம்புத்தூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடை பெற்றது. இப்போட்டியில் வடக்கு மண்டலம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, குண்டு எறி தல் போட்டியில் முதல் பரிசும், நீளம் தாண்டுதலில் 2-ம் பரிசும் பெற்றார். அதேபோல் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டு அன்பரசன், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் பரிசும், நீளம் தாண்டுதலில் முதல் பரிசும், அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய ஏட்டு ரகோத், 5 கி.மீ. நடைபயிற்சி போட்டியில் 2-ம் பரிசும், திரு வெண்ணெய்நல்லூர் ஏட்டு வரலட்சுமி 5 கி.மீ. நடைபயிற்சி போட்டி யில் முதல் பரிசும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் பரிசும், திண்டிவனம் போலீஸ்காரர் தர்மன், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் பரிசும் வென்றனர். இதையடுத்து பதக்கம் வென்ற போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தீபக் சிவாச்சை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags

Next Story