குமரியில் இன்று 6 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு .

குமரியில் இன்று 6 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு .
போலீஸ் தேர்வு மையத்தை ஆய்வு செய்த எஸ்.பி சுந்தர வதனம்.
குமரியில் இன்று 6 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு மையங்களில் இன்று போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதற்காக குமரி மாவட்டத்தில் சுங்கன்கடை சேவியர் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி, தோவாளை சிஎஸ்ஐ கல்லூரி, தோவாளை லயோலா கல்லூரி, நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி ஆகிய ஆறு மையங்களில் மொத்தம் 7 ஆயிரத்து 386 பேர் தேர்வை எழுதுகிறார்கள்.

இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதுவதற்காக காலையில் இருந்து தேர்வு மையங்களில் தேர்வர்கள் வரத் தொடங்கினர். இதற்காக ஆறு மையங்களிலும் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வர்களின் வசதிக்காக அரசு பஸ்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story