விபத்தில் சிக்கிய போலீஸ்காரர் பலி

விபத்தில் சிக்கிய போலீஸ்காரர் பலி

 விபத்தில் சிக்கிய போலீஸ்காரர் பலி

திண்டிவனம் அருகே விபத்தில் சிக்கிய போலீசார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கீழ்மன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடேசபுரத்தில் தங்கி அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 4-ந்தேதி ஆத்தூர் சுங்கச்சாவடியில் மணிகண்டன் பணியில் இருந்தார். அப்போது அவர் திண்டிவனம் அருகே ஓங்கூரில் உள்ள ஒரு கடைக்கு டீ குடிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கு டீ குடித்துவிட்டு மீண்டும் ஆத்தூர் சுங்கச்சாவடிக்கு புறப்பட்டார், ஓங்கூர் குபேரன் கோவில் அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக மணிகண்டன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது, இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டனை ஒலக்கூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story