விஷம் குடித்த போலீஸ்காரர்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விஷம் குடித்த போலீஸ்காரர்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விஷம் குடித்த போலீஸ்காரர்

தூத்துக்குடியில் விஷம் குடித்த போலீஸ்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 
தூத்துக்குடி ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவர் குடும்பத்துடன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். அந்த போலீஸ்காரர் நேற்று முன்தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக வீட்டில் வைத்து திடீரென்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story