ஆதரவற்ற முதியோருடன் தீபாவளியை கொண்டாடிய காவல்துறையினர்.

ஆதரவற்ற முதியோருடன்  தீபாவளியை கொண்டாடிய காவல்துறையினர்.

முதியோர் இல்லத்தில் போலீசார் தீபாவளி கொண்டாட்டம் 

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் வள்ளலார் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுடன் கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒன்றிணைந்து தீபாவளியை கொண்டாடினர். அங்கிருந்த இருந்து 100 முதியவர்களுக்கு இனிப்புகள்,பட்டாசுகள்,புத்தாடைகள் மற்றும் காலை உணவு வழங்கியதோடு அவர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி முன்னெடுத்த இந்த செயலை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story