ராசிபுரம்: லாரி கவிழ்ந்து விபத்து

ராசிபுரம்: லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

ராசிபுரம் அடுத்த ஏடிசி., டிப்போ அருகே தக்காளி, வெங்காயம் ஏற்றி வந்த பொலிரோ பிக் வாகனம் கவிழ்ந்து விபத்து 1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி, வெங்காயம் சேதமடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இருந்து பொலிரோ பிக் அப் வாகனத்தில், செந்தில் என்பவர் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைக் ஏற்றுக்கொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ராசிபுரம் பஸ் டெப்போ அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். 1.5 லட்சம் மதிப்பிலான தக்காளி வெங்காயம் சாலையில் உருண்டோடி வீணாகியது. இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story