பாபநாசத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

பாபநாசத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை கல்யாணசுந்தரம் எம்பி துவங்கி வைத்த போது எடுத்த படம்

பாபநாசம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை கல்யாணசுந்தரம் எம்பி துவங்கி வைத்தார்
பாபநாசம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் கல்யாணசுந்தரம் எம்பி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது . பாபநாசம் தலைமை மருத்துவ அலுவலர் குமரவேல் தலைமை வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார். இம் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் டாக்டர்கள் தனம், ஹேமாவதி ,நர்ஸ் கௌசல்யா தேவி, மருந்தாளுனர் செழியன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவி .அய்யாராசு, துரைமுருகன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story