காங்கேயத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

காங்கேயத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் அரசு தொடங்கி வைத்தது. போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயை அறவே ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட பகுதியில் சுமார் 1154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. காங்கேயத்திலும் பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

முகாமிற்காக சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் பணி அமர்த்தப்பட்டு இந்த முகம் சிறப்பாக நடைபெற்றது.

Tags

Next Story