தர்மபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் – ஆட்சியர் துவக்கி வைப்பு

தர்மபுரியில் போலியோ சொட்டு மருந்து முகாம் – ஆட்சியர் துவக்கி வைப்பு

போலியோ சொட்டு மருந்து

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் தருமபுரி பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்தார்.

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இம் முகாமினை கலெக்டர் சாந்தி தர்மபுரி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து துவக்கி வைத்தார். போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் 1,33,280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்கள் நகராட்சி பகுதியில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்பட்டுள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4,083 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 17 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 30 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் இன்று இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது திமுக நகர கழக செயலாளர் நாட்டான் மாது நகர மன்ற உறுப்பினர்கள் ஜெகன் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story