கள்ள கருத்து திணிப்பு பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி!

ஊடகங்கள் வெளியிட்டது கள்ள கருத்து திணிப்பு என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்தார்.

ஊடகங்கள் வெளியிட்டது கள்ளக் கருத்து திணிப்பு என்றும், எந்த அலை வீசினாலும் தமிழகத்தில் எடப்பாடியார் அலை வீசுவதாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேட்டியளித்தார். திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பூத் முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன் வழங்கி, அடையாளை அட்டையை வழங்கினார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், 2014 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பத்திரிக்கை, ஊடகங்களில் தெரிவித்தனர்,ஆனால் தமிழகத்தில் அம்மா தலைமையில் 39 இடங்களில் 37 இடங்களில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது, பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, அதேபோன்று தற்பொழுது நாடு முழுவதும் எந்த அலை வீசினாலும் தமிழகத்தில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அலை வேகமாக வீசிக்கொண்டிருக்கிறது, அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவினர் வெற்றி பெறுவார்கள், தமிழக மக்கள் எதிர்பார்க்கின்ற தலைவராக புரட்சித் தமிழர் எடப்பாடியார் மாறி உள்ளார்.

மேலும் ஊடகங்கள், பத்திரிகைகளில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு அல்லது கள்ளக் கருத்து கணிப்பு என்று கூறலாம், தயாரிக்க வைக்கப்பட்ட கருத்துக்கணிப்பு, 48 மணி நேரத்துக்கு முன்பு கருத்துக்கணிப்பை வெளியிட்டால் அதிமுகவினர் சோர்வடைந்து விடுவார்கள் என்று வெளியிடப்பட்ட கருத்து திணிப்பு, ஆனால் அதிமுக தொண்டர்கள் நிச்சயம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் வழியில் அச்சமறியாமல் வெற்றியை குவிப்பார்கள், விரைவில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதத்தின் மீது நம்பிக்கை உண்டு யாரும் எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசக்கூடாது இன்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேட்டியளித்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பழனிச்சாமி, அதிமுக திருப்பூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் அருணாச்சலம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story