வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
சிவகாசியில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.ஜூன் 4ம் தேதி காலை 7 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணியும் அதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

இதில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்,மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில் சிவகாசி யூனியன் துணைத் தலைவரும் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான விவேகன்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர பகுதி கழகச் செயலாளர்கள் கவுன்சிலர் அ.செல்வம்,மாரீஸ்வரன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் பொன்சக்திவேல், மாநகர துணைச் செயலாளர் ரவிச்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story