வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான வி எஸ் வி என் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வரும் ஜூன் நான்காம் தேதி வாக்கு என்னும் பணி நடைபெற உள்ளது வாக்கு என்னும் பணியை எந்தவித பிரச்சனையும் இன்றி நடத்தி முடிக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

Tags

Next Story