இரவு 8 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

இரவு 8 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு

எட்டு மணி வரை நடந்த வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்ற தொகுதி பூத் எண் 210 ல் போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாததால் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் துறையூர் தனி சட்டமன்ற தொகுதி பூத் எண் 210 ல் பெரும்பாலான வாக்களர்கள் நரிக்குற இன மக்கள். இவர்களுக்கு போதிய தேர்தல் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் வாக்களிக்க வரும் பொழுது அடையாள அட்டை ஏதுமின்றி தேர்தல் அலுவலரால் கொடுக்கப்பட்ட பூத் ஸ்லிப் ஆகியவற்றை எடுத்து வர மறந்ததால் அவர்களுக்குள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

அதனால் தேர்தல் வாக்கு சாவடி அதிகாரிகளும் தடுமாறினார் பிறகு அவர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை எடுத்து வருமாறு அறிவுரை கூறி அனுப்பியதால் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதாகவும் மேலும் ஆண் பெண் ஆகியோர் வரிசையை பின்பற்றாமல் நடந்து கொண்டதால் காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.இதனால் அனைவரும் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்ய இரவு 8 மணி வரை ஆனது.

Tags

Next Story