வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்

வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம்

செங்கல்பட்டில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.


செங்கல்பட்டில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த பையனூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.. இந்த பயிற்சி முகாமில் தேர்தல் நேரத்தில் வாக்கு எண்ணிக்கை இயந்திரம் மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவர்களை எப்படி கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது..அப்போது திடீரென செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பயிற்சி முகாமினை ஆய்வு மேற்கொண்ட பிறகு ஆசிரியர்களிடம் பயிற்சி முகம் குறித்து கேள்விகளை கேட்டறிந்தார்.. குறிப்பாக தேர்தல் அலுவலராக பணி செய்யும் பெண் ஆசிரியர்கள் எந்தத் தொகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பணி செய்யும் இடத்தைச் சார்ந்த தொகுதியில் அவர்களுக்கு அன்று ஒரு நாள் பணி நியமனம் செய்யப்படும் என தெரிவித்தார்..

Tags

Next Story