பொன் காளியம்மன் கோயில் பொங்கல் விழா

பொன் காளியம்மன் கோயில் பொங்கல் விழா

பொன் காளியம்மன் கோயில் பொங்கல் விழா

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பொன்காளியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள புகழ்பெற்ற பொன்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்ற பூஜையில் பொங்கல் மற்றும் மாவிளக்கு படையலிட்டு வழிபட்டனர். இதன் பின் இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியில் குதிரை முன் செல்ல சப்பரத்தில் அம்மன் உலா நடைபெற்றது.

அப்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. கோவிலை சுற்றிலும் விடிய விடிய காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்திருந்த தீப்பந்தங்களை கொளுத்தி அம்மனை வழிபட்டனர். இதில் ஈரோடு, கோவை,திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story