கனமழையால் நிரம்பிய குளங்கள் - உபரி நீர் வெளியேற்றத்தால் அவதி

கனமழையால்  நிரம்பிய  குளங்கள் - உபரி நீர் வெளியேற்றத்தால் அவதி

நிரம்பிய குளங்கள் 

கோவை,நீலகிரி உட்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.குறிப்பாக அன்னூர்,சிறுமுகை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அன்னூர்,ஒட்டார் பாளையம்,ஊத்துப்பாளையம் ,கஞ்சப்பள்ளி குளங்கள் நிரம்பியது.குளங்கள் நிரம்பியதன் காரணமாக அதிலிருந்து வெளியேறும் நீர் அன்னூர் - சத்தியமங்கலம் சாலையில் ஓடியது.இதன் காரணமாக சாலையில் பயணித்த பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தண்ணீர் தேங்கி உள்ளதுடன் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்வதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருப்பதன் காரணமாக அன்னூரில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story