கடும் வெயிலால் தீவுகளாக மாறிய குளங்கள்

கடும் வெயிலால் தீவுகளாக மாறிய குளங்கள்

 தீவுகளாக மாறிய குளங்கள்

நெல்லையில் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் குளங்கள் வறண்டு தீவுகள் போல காட்சியளிக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தினம்தோறும் சதத்தை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவாகி வருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் உள்ள குளங்கள் வறண்டு தீவு போல் காட்சி அளிக்கின்றது. இந்த தண்ணீரை நம்பி வரும் பறவைகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன.

Tags

Next Story