பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் கொண்டாட்டம்

சங்ககிரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

சங்ககிரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்ககிரி வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில். நீதிமன்ற வளாகத்தில் புதிய மண்பானையில் பொங்கல் வைத்து, கரும்புகள், மஞ்சள் வைத்து படையிலிட்டு கொண்டாடப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது .

இவ்விழாவில் சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் , மாவடட் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா, அரசு கூடுதல் உதவி வழக்குரைஞர் கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையில் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் அருள்பிரகாஷ், வழக்குரைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் தேவராஜ், செயலாளர் தமிழரசன், உள்ளிட்டவழக்குரைஞர்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story