ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது. 

ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.
சேலம் அம்மாபேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான சேசுராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வக்கீல் ஏ.எஸ்.அன்பு கலந்து கொண்டு பேசினார். விழாவில் பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் செல்வமாளிகை ராஜா, பள்ளி நிர்வாகி ஏசுதாசன், இண்டர் நேஷனல் பள்ளி முதல்வர் குழந்தைசாமி, பள்ளி துணை முதல்வர் சங்கீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, கோலம், பானைவரைதல், பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் விழாவில் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களின் பல்வேறு நடனங்கள், இசைக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன.

Tags

Next Story