பொங்கல் விழாவை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பொங்கல் விழாவை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பொங்கல் கொண்டாட்டம்

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், இன்று பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ- மாணவியர்கள் உறியடிக்கும் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மேலும், விழாவை சிறப்பிக்க வந்த கலை குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கலைஞர்கள் மேளதாளங்களை இசைத்து, மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், மஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரி தங்காள், மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் காகல் அன்சார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள், பள்ளி மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story