குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

விருநகரில் உள்ள அன்பு இல்லம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.

தைப்பொங்கல் வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு இன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தைப்பொங்கல் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் விருதுநகரில் அமைந்துள்ள அன்பு இல்லம் குழந்தைகள் காப்பகத்தில் விருதுநகர் மாவட்ட முதன்மை நடுவர் நீதிபதி கவிதா அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி,இளஞ்சிறார் இளைஞர் நீதிகுழுமம் உறுப்பினர்கள் சதீஷ்குமார் மற்றும் எட்டு குழந்தைகள் காப்பக குழந்தைகள் பங்கேற்றனர். மேலும் அன்பு இல்ல வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்குபோட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story