நாமக்கல் ஒன்றியத்தில் சசிகலா அணி சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நாமக்கல் ஒன்றியத்தில் சசிகலா அணி சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் விழா கொண்டாட்டம்

நாமக்கல் ஒன்றியத்தின் சசிகலா அணியினர் சார்பாக கிராமப் பகுதியில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் சார்பாக நிர்வாகிகள் கிராமப் பகுதியில் பொங்கல் கொண்டாட்டம்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.என். கோபால் அவர்கள் தலைமையில் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பட்டி ஊராட்சி பகுதியில் பொங்கல் விழா கழக நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக சாமி படங்களுக்கு மாலை அணிவித்து படையல் இட்டு பூஜைகள் செய்து பொங்கலோ பொங்கல் என கோஷங்கள் எழுப்பி சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பொங்கல் வழங்கி நிர்வாகிகள் சிறப்பித்தனர். இந்த பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த ஊராட்சி செயலாளர் அய்யாவு , மற்றும் நிர்வாகிகளை மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இந்த பொங்கல் விழாவில் கழக நிர்வாகிகள் மணிகண்டன் வெண்ணந்தூர் பேரூராட்சி எம். மணிவாசகம், ரஜினி, காந்தி, தனபால், கந்தசாமி ,மற்றும் மகளிர் அணியினர் என கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story