கருங்கல் பஸ் நிலையத்தில் பொங்கல் விழா

கருங்கல் பஸ் நிலையத்தில் பொங்கல் விழா

பேரூர் திமுக., சார்பில் கருங்கல் பஸ் நிலையத்தில் பொங்கல் விழா நடந்தது

பேரூர் திமுக., சார்பில் கருங்கல் பஸ் நிலையத்தில் பொங்கல் விழா நடந்தது

குமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கருங்கல் பேரூர் திமுக சார்பில் கருங்கல் பேருந்து நிலையம் அருகில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கருங்கல் பேரூர் திமுக செயலாளர் அருள்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் ராஜன், மாநில சட்டத்துறை துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தினேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜூட் தேவ் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தொழிற்சங்க தலைவர் பால்ராஜ், கிள்ளியூர் ஒன்றிய அவைத்தலைவர் பி .எஸ். தாமஸ், மாவட்ட பிரதிநிதிகள் லலிதகுமார், மரிய ஜோஸ், கருங்கல் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்பின் அருள்ராஜ், எப்சி ராணி, மேரி அஞ்சலி, கருங்கல் பேரூராட்சி துணைச் செயலாளர் கீதா, மகளிர் அணி பொறுப்பாளர் ரூபி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜஸ்டின், கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story