சேராம்பட்டு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய காணும் பொங்கல் விழா

சேராம்பட்டு ஸ்ரீ எல்லையம்மன் ஆலய காணும் பொங்கல் விழா

சிறப்பு பூஜை 

திருவண்ணாமலை மாவட்டம், சேராம்பட்டு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சேராம்பட்டு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் காணும் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீப ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடு செய்தனர். காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பேருந்துகள் செய்யாறிலிருந்து இயக்கப்பட்டது.

Tags

Next Story