அன்பகம் சிறப்பு பள்ளியில்,பொங்கல் விழா கொண்டாட்டம்

அன்பகம் சிறப்பு பள்ளியில்,பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழா கொண்டாடப்பட்டது 

அன்பகம் சிறப்பு பள்ளியில் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கொண்டாடினார்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் பகுதியில் அன்பகம் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது, இங்கு சற்று மனநலம், மற்றும் கை, கால் செயல்படுத்த முடியாத மாற்றுதிறனாளி குழந்தைகள் , சிறுவர்கள், மாணவ, மாணவிகள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த சிறப்பு பள்ளியில், வளைகரங்கள் சங்கம் சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவில் வளைகரங்கள் சங்க தலைவி அமராவதி, செயலர் புஷ்பாதேவி ஆகியோர் அன்பகம் சிறப்பு பள்ளி சிறப்பு ஆசிரியர்களுக்கு பொங்கள் சீர் வரிசை கொடுத்து அங்குள்ள மாணவ, மாணவிகளோடு, சேர்ந்து பொங்கள் வைத்து, படையலிட்டு பெங்கல் விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.

விழாவில் அன்பகம் பள்ளி ஆசிரியர்கள்,வளைகரங்கள் சங்க உறுப்பினர்கள்,மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டுடனர். நிறைவாக அன்பகம் சிறப்பு பள்ளி பொருப்பாசிரியர் பாலகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story